Category Archives: உளவியல் நோக்கிலோர் ஆய்வு

தோல்வியைச் சந்திப்பதால்…

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
(குறள் – 467)

விளக்கம்: எந்தவொரு செயலையும் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளையும் எண்ணிப் பார்த்தே, அதில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின் அதனைச் செயற்படுத்த உதவும் வழிகளை எண்ணிப் பார்ப்பது தவறாகும்.

9665901531_8210e86d03_o
நமது பக்கத்தை மட்டும் நாம் பொருட்படுத்துவதால் தோல்வி தான் தொடரும். அடுத்தடுத்துத் தோல்வியைச் சந்திப்பதால், உளத் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. உளத் தாக்கம் உடலைத் தாக்கலாம். ஈற்றில் உள-உடல் நோய்கள் நெருங்க வாய்ப்பளிக்கும்.

இப்பதிவை முழுமையாகப் படிக்க…
http://www.ypvnpubs.com/2017/02/blog-post_17.html

தொண்ணூறு விழுக்காடு வாழ்ந்தோமா?

“பிறந்து இறக்கும் வரை கிடைத்த வாழ்வில் 90 விழுக்காடு பலர்
தம் வாழ்வைச் சுவைத்திருக்கவில்லையாம். அதாவது, தொண்ணூறு (90) விழுக்காடு மகிழ்வோடு வாழ்ந்துவிடவில்லை (அனுபவிக்கவில்லை).” என்றொரு ஆய்வு கூறுவதாக நாளேடு ஒன்றில் படித்தேன். அதன் விளைவாகக் கீழுள்ள கிறுக்கலைப் பாரும்.

வாழ்வில்
பிறப்பும் இறப்பும்
ஒரு முறை தான் – நம்மை
எட்டிப் பார்க்கும் – அந்த
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே இருக்கின்ற – விரைவாய்
கரைந்திடும் வாழ்வைத் தான்
நாம்
பிறர் போற்ற வாழ்ந்தோமா
நாம்
பிறர் தூற்ற வாழ்ந்தோமா
என்றாவது எப்போதாவது
நாம்
எண்ணிப் பார்த்ததுண்டா? – அப்படி
நாம்
எண்ணிப் பார்த்திருந்தால்
நாம்
நல்வாழ்வை அதிகம்
சுவைத்திருப்போமே!
என்றாவது எப்போதாவது
வேண்டாத எல்லாவற்றையும்
எண்ணி எண்ணிப் பார்த்தே
எங்கள்
தொண்ணூறு விழுக்காடு மகிழ்வான
வாழ்வைச் சுவைக்காமலே
சாவுக்கு உலை வைக்கிறோமே!

இனி, “நாம் ஏன் தொண்ணூறு விழுக்காடு வாழாமல் சாகிறோம்” என்று எண்ணிப் பார்ப்போமா!

வாழ்க்கை என்ற பாடம் எவரும் சொல்லித்தருவதில்லை. எனக்கும் கூட “மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டு” என்று பெரியோர்கள் வழிகாட்டினர். “வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றும் “வாழ்க்கையில் இன்பம், துன்பம், தேட்டம் (இலாபம்), சோர்வு (நட்டம்), உறவுகள், பிரிவுகள் எல்லாம் வரலாம். அதற்கேற்ப நம்மை நாமே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றும் அறிஞர்கள் வழிகாட்டினர். இப்படித் தான் ஆளுக்காள் அறிவுரை கூறினார்களே தவிர, இப்படித் தான் வாழவேண்டுமென எவரும் வழிகாட்டியதில்லை. அப்படியாயின் மற்றவர்களின் முன்மாதிரியான வாழ்வைக் கண்காணித்து நாம் தான் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆறாம் அறிவென்றால் நல்லது, கெட்டதை வேறாக்கி நல்லதை மட்டும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதை ஆறறிவுள்ள மனிதனுக்கு தெரியாமல் போகின்றது. மற்றவர்களின் முன்மாதிரியான வாழ்வைக் கண்காணித்து நாம் வாழக் கற்றுக்கொண்டோமா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். அதாவது, ஆறாம் அறிவின் படி பயனுள்ள எதனையும் பின்பற்றவில்லை என்பேன்.

படிப்பைக் கருதினால்:
முறைசார் கல்வியைத் தொடர முடியாதவர் முறைசாராக் கல்வியைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.

உழைப்பைக் கருதினால்:
படித்த படிப்புக்கேற்ற தொழில் கிட்டும் வரை காத்திருக்காமல் அகப்பட்ட தொழிலில் இறங்கி வருவாய் ஈட்டிக்கொண்டு, படித்த படிப்புக்கேற்ற தொழில் கிட்டியதும் பாய்ந்து வருவாய் ஈட்டி முன்னேறியவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.

காதலைக் கருதினால்:
நெடுநாள் பழகிய ஒருவர் மீது நம்பிக்கையானவர் என்பதை நன்கறிந்த பின்னர் காதல் கொண்டு வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை (கண்டதும் காதல் கொண்டதே கோலமென வீழ்வோர் அதிகம்).

திருமணத்தைக் கருதினால்:
இருவீட்டார் விருப்போடு ஆண், பெண் விருப்பறிந்து கெடுபிடி (கொடுப்பனவுகள்/சீதன, ஆதனத் தொல்லை) இன்றித் திருமணம் செய்து வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை (திருமணம் என்பது கொடுப்பனவுகளில் (சீதன, ஆதனம்) தான் என்று வீழ்வோர் அதிகம்).

பிழைப்பைக் கருதினால்:
திருமணமாகிக் குடும்பம் ஆனதும் இருவரும் விரும்புகின்ற வேளை பாலியல் (Sex) உறவை மேற்கொண்டு மகிழ்வடைவோர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை (ஆணின் விருப்புக்கு பெண் இணங்க வேண்டுமென்ற கோட்பாட்டில் மகிழ்வின்றி மணமுறிவும் ஏற்படுகிறது).

செயலைக் கருதினால்:
1. வருவாய்க்கு மீறிச் செலவு செய்யாமல் சேமித்து வாழ்ந்து வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.
2. முரண்பாடுகள் தோன்றினால் விட்டுக்கொடுத்து உறவுகள் முறியாமல் பேணி வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.
3. பலனை எதிர்பார்க்காது எல்லோருக்கும் முடிந்தளவு உதவுவதும் ஒத்துழைப்பு வழங்குவதுமாக நல்லுறவைப் பேணி வென்றவர் இருக்க; நம்பில் பலர் அவ்வாறு செய்வதில்லை.

இப்படி எத்தனை எத்தனை வழிகளில் மற்றவர்களின் முன்மாதிரியான வாழ்வைக் கண்காணித்து நாம் முன்னேறாது விட்டமையால் தொண்ணூறு விழுக்காடு வாழ்வில் மகிழ்ச்சியை இழந்து சாவடைகின்றோம் என்பதை நான் படித்த ஆய்வு தெரிவிக்கா விட்டாலும் எப்படியோ தொண்ணூறு விழுக்காடு வாழ்வில் மகிழ்ச்சியை இழந்து சாவடைகின்றோம் என்பது உண்மையே! இனியாவது குறைகளைக் கண்டு நிறைவாக்கி தவறுகளைச் சரியாக்கி நூறு விழுக்காடு (வீதம்) வாழ்வில் மகிழ்ச்சியை/ சுகத்தை அடைந்த பின் சாகலாம் தானே!

பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பது இயற்கை அல்லது படைத்தவன் படியளப்பு. ஆயினும், நம்மில் தன்னம்பிக்கையும் உளநலம், உடல்நலம் பேணுவதும் ஆக இருந்தால் நீண்ட காலம் (இருநூறு ஆண்டுகள் வரையாவது…) வாழமுடியுமே! அதற்குக் கூட நூறு விழுக்காடு (வீதம்) வாழ்வில் மகிழ்ச்சியை/ சுகத்தை அடைந்தால் தான் வாய்ப்புண்டு.

கனவு பற்றிச் சற்று எண்ணிப் பாருங்களேன்!

மனிதன் சுறுசுறுப்பாக இருக்கிறான் என்றால் மூளையும் அவ்வாறே இயங்கும். மனிதன் தூங்கிவிட்டால் மூளையும் அவ்வாறே தூங்காது விழித்துக்கொண்டே இருக்கும். அவ்வேளை மூளை என்ன செய்துகொண்டிருக்கும்? மனிதன் தூங்குமுன் பதிவு செய்து வைத்திருந்த தகவலை மீள வாசித்துக்கொண்டிருக்குமாம். அதாவது, ஒலிப்பதிவு கருவியில் (Tape Recorder இல்) பதிவு செய்ததை மீட்டுக் (Rewind செய்து) கேட்பது போல இயங்குமாம். அவ்வாறு இயங்கும் வேளை தான் கனவு தோன்றுவதாகப் பத்திரிகை ஒன்றில் படித்த நினைவு.

மூளை இயங்கும் செயலையே உள்ளம் (Mind) என்கிறோம். அப்படி நோக்குகையில் உணர்வு (நனவு) உள்ளம் (Conscious Mind) ஓய்வடைய உணர்வுத்துணை (நனவுத்துணை) உள்ளம் (Sub Conscious Mind), உணர்வற்ற (நனவிலி) உள்ளம் (Unconscious Mind) இயங்கும். அவ்வேளை அவை உணர்வூட்டப்பட்ட (உணர்ச்சி வசப்பட்ட) தகவலை மீள வாசித்துக்கொண்டிருக்கையில், குறித்த ஆள் உணர்வூட்டப்பட (உணர்ச்சி வசப்பட) விழித்துக் கொள்வதாகவும் அதனையே கனவு தோன்றியதாக எண்ணுகின்றனர்.

அதாவது உணர்வுத்துணை (நனவுத்துணை) உள்ளத்தில் (Sub Conscious Mind) பதியப்பட்ட தகவலாக இருப்பின் பயணம் செய்யும் போது வழியில் விபத்துக்குள்ளாக நேரிட்ட நிகழ்வு கனவாகத் தோன்றலாம். அல்லது உணர்வற்ற (நனவிலி) உள்ளத்தில் (Unconscious Mind) எழும் நடைமுறைக்குப் பொருந்தாத எண்ணங்களாக இருப்பின் அடுத்த தேர்தலில் நாட்டின் தலைவராக இடமுண்டெனக் கனவாகத் தோன்றலாம். எனவே, கனவு மெய்ப்படும் என்பதெல்லாம் பொய் என்பேன்.

இப்படித் தான் நான் படித்திருந்தாலும் “கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம்” என்ற மருத்துவர் முருகானத்தன் ஐயா அவர்களின் பதிவில் “நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போது தான் கனவு காண்பதாக உணர்கிறோம்.” என்று விளக்கம் தந்து பதிவு நீண்டு செல்கிறது. அதனைத் தாங்களும் படித்து “கனவு பற்றிச் சற்று எண்ணிப் பாருங்களேன்!” என்று சொல்ல வந்தேன். கீழுள்ள அப்பதிவின் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறவும்.

கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம்

உளநோய் நெருங்காமல் பேணுவோம்.

உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால் மட்டும் போதாது, உள்ளத்தால் நல்லதையும் கெட்டதையும் வேறாக்கி நமக்குப் பயன்தரும் நல்லதை முடிவு செய்து பயன்படுத்த முடிந்தாலே நலமான உள்ளம்.

செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்க வழிகாணத் தெரிய வேண்டும். பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தித் தவறான செயல்களில் ஈடுபடாதிருக்க வேண்டும். சிக்கல் வருகின்ற போதும் சிக்குப்படாமல் நழுவத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு எல்லாவகையிலும் உள்ளத்தால் உறுதியான நலம் தரும் முடிவுகளை எடுக்க முடியும் என்றால் உளநோய் நெருங்காத உள்ளம் என்று கூறலாம்.

அப்படியாயின், உளநோய் பற்றி நான் சொல்லாமலே நீங்களே உங்களால் புரிந்தது கொள்ள முடியுமே! உள்ளத்தால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு வழியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரின் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்ற வாய்ப்பு ஏற்படலாம். அதாவது, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இதனைச் சரி செய்யக்கூடிய உளக்குறைபாடு எனலாம். உளநல மருத்துவரின் மதியுரைப்படி பயிற்சிகளைச் செய்துவர இயல்பு நிலைக்கு மீளலாம். உளநல மதியுரைஞரின் மதியுரையையும் நாடலாம்.

உளநோய் என்றால் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று கருதக்கூடாது. அவ்வாறு எண்ணி மருத்துவரை நாடாவிட்டால் இலகுவான உளக்குறைபாடு பெரிய பெரிய உளநோய்கள் ஏற்பட வழி அமைத்துவிடும். இயல்பு நிலையில் ஏனையோரைப் போன்று முடிவு எடுத்தலிலும் நடத்தை மாற்றத்திலும் சற்றுத் தளர்வு காணப்படின் உளநல மருத்துவரை(Psychiatrist) நாடிக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறான உளக்குறைபாடு ஏற்படாமல் இருக்கச் சில வழிகள்:
நாளுக்கு நாள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் ஓட முயிற்சி செய்யுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது நேரம் பந்தடியுங்கள்.
நாளுக்கு நாள் சிறிது தூரம் மிதிவண்டியை மிதியுங்கள்.
நாளுக்கு நாள் யோகாசனம், தியானம் செய்யலாம்.
இவ்வாறான பயிற்சிகள் சுயமுயற்சிகளே! இவற்றை விடச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கத் துணிச்சலை வளர்க்க வேண்டும். இல்லையேல் குறித்த சூழலை விட்டுத் தன்னம்பிக்கையுடன் விலகிப் புதிய சூழலை நாடி புதிய உறவுகளுடன் இணைய வேண்டும்.

அன்பான உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இவ்வாறு நிகழாமல் இருக்க:
குடும்பத்தில் சமநிலையில் எல்லா உறவுகளையும் பேணுதல் வேண்டும்.
குடும்பத்திலோ பணித்தளத்திலோ விளையாட்டுத் திடலிலோ பிற எந்தச் சூழலிலும் எவரையேனும் ஒதுக்கி வைத்தல் கூடாது.
பிறரது உள்ளம் நோகும் படி எதையாவது செய்துவிடாதீர்கள்.
ஒதுங்கும் உள்ளங்களைக் கூட அன்பாலே கட்டிப்போட்டு சூழலுக்குள் உள்வாங்க வேண்டும்.
சூழலில் நிகளும் எந்த நிகழ்விலும் ஒதுங்கியுள்ள உறவுகளை உள்வாங்கி இயல்பு நிலைக்கு முகம் கொடுக்க வைக்கவேண்டும்.

இதற்கு மேலும் இயல்பு நிலையில் சூழலை விட்டு ஒருவர் ஒதுங்கி இருப்பாராயின் அல்லது எல்லோரிடம் இருந்தும் ஒருவர் வேறுபட்ட நடத்தைகளைக் கொண்டிருப்பாராயின்; அவருக்கு உளநோய் இருப்பதாகக் கருதி உளநல மருத்துவரி(Psychiatrist)டம் காட்டுங்கள். எப்படியாயினும் உளநல மதியுரைஞரி(Counsellor)டம் காட்டவேண்டாம். ஏனெனில், குறித்த ஆளுக்கு “உடல் நோயா? உள நோயா?” என்பதை உளநல மருத்துவரே(Psychiatrist) முடிவு செய்வார்.   மருத்துவர் அனுதித்தால் மட்டுமே மதியுரைஞரை(Counsellor) நாடலாம்.

ஓருயிர் உலகத்தை விடப் பெறுமதியானது. ஒருவரின் பணி நாட்டுக்கும் வீட்டுக்கும் பெரிய முதலீடு. எவரையேனும் ‘விசர்’, ‘பைத்தியம்’ என்று ஒதுக்கி வைக்காமல் உளநோய் முற்றவிடாமல் தொடக்கத்திலேயே சரி செய்யக்கூடிய உளக்குறைபாடுகளை மருத்துவரி(Psychiatrist)டம் அல்லது மதியுரைஞரி(Counsellor)டம் காட்டிக் குணப்படுத்த முன்வாருங்கள்.

ஒருவர் செயலிழக்க உடன்பட்டால் நீங்கள் இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கீறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒருவரின் உளநோயைக் குணப்படுத்தி இறைவனுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்காமல் குறித்த ஆளின் வளத்தை நாட்டுக்கும் உலகுக்கும் பயன்படுத்த நல்வழி செய்யுங்களேன். இதனால் நமது சூழலில் உளநோயாளர்களை இல்லாமல் செய்யலாம்.

வழிப்படுத்தல் (Mentoring) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

குடும்ப மருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் தனது தளத்தில் பதிவு செய்த வழிப்படுத்தல்-mentoring என்ற பதிவைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். உளநலப் பேணுகைப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் மட்டுமல்ல துறைசார் நுட்ப வளங்களைப் பகிருவோருக்கும் உதவும் சிறந்த பதிவாக நானுணர்ந்து தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

கீழுள்ள இரண்டு படங்களையும் உள்ளத்தில் இருத்துங்கள். வழிப்படுத்தல் கொண்டிருக்கும் உள்ளடக்கம் என்னவென்று அறிந்துகொள்ளுங்கள்.

வழிப்படுத்தல் - Mentoring

வழிப்படுத்தல் - Mentoring

“தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும்.” என மருத்துவர் தெரிவிப்பதில் உண்மையிருக்கு.

எவருக்கும் படித்தறிவு இருப்பினும் பட்டறிவு தானே வழிகாட்டுகிறது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பட்டறிவு கிட்டுவதில்லை. அப்படியாயின், படித்தறிவை மேம்படுத்த உதவுவது வழிப்படுத்தல் (Mentoring) என்றே நம்புகிறேன்.

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படியுங்க.

வழிப்படுத்தல் Mentoring
via வழிப்படுத்தல் – Mentoring.

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?

பகலில் குட்டித் தூக்கம் என்றால்
உடல் நலம் பாதிக்கும் என்ற பேச்சு
இனி இருக்கதே! – இது
பலருக்குத் தெளிவூட்டும்
சிறந்த ஆய்வுக் கட்டுரை ஆச்சே!

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?.

via பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?.

நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா?

“நீரிழிவு வராமல் தடுக்க முடியுமா? – பசிய இலை வகைகள்.

‘சீனி சாப்பிடாவிட்டால் நீரிழிவு வருத்தம் வராதுதானே’. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒருவர் மனைவிக்கு அளித்த விளக்கம் அது.

‘தாய் தகப்பனுக்கு இருந்தால்தான்; பிள்ளைகளுக்கும் வரும்.’ என்றார் மற்றொருவர்.

நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் தாம் நினைத்ததை எல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது.

அப்படியானால் தடுப்பது எப்படி?” என மருத்துவர் முருகானந்தன் ஐயா வழிகாட்டுகிறார்.

மிகுதியைத் தொடர்ந்து படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://hainallama.blogspot.com/2014/04/blog-post_2690.html

மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு

மருத்துவர் முருகானந்தன் அவர்களின் ஆய்வினத் தாங்கள் படிப்பதனால் மனச் சோர்வு பற்றிய தெளிவைப் பெற்றுக்கொள்ளாம்.

சிறந்த வழிகாட்டல்.

 

மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு.

via மகிழ்ச்சியற்ற கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? மனச்சோர்வு.

வலிய, வளத்தில வரவைக்கப் போய்ப் பிரிவதா?

என்னைத் தன் காலில் விழவைக்க, என் எதிரிக்கு ஒரு நீண்ட நாள் விருப்பம். அதற்காகப் பலரிடம் மதியுரை கேட்டிருக்கிறான். மதியுரை கூறியவர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.
1. காசில்லாட்டி என்னட்டத் தானே வரணும் – ஓர் உறவு.
2. ஒருவரும் பெண் கொடுக்காட்டி, என்ர பிள்ளையைத் தானே கட்ட வேண்டி வரும் – இன்னோர் உறவு.
3. ஒருவரும் தொழில் கொடுக்காட்டி, என்னைத்தானே கெஞ்சுவார் – இன்னோர் உறவு.
4. இருக்கப், படுக்க இடமில்லாட்டி, என்னட்டத் தானே வரணும் – இன்னோர் உறவு.
இன்னும் அடுக்கலாம்… ஆனால், நான் இவற்றை நீட்ட விரும்பவில்லை.
அவரவர் தமது பக்கம் சார்ந்த மதியுரைகளைக் கூறியிருந்தார்கள். எந்த மதியுரைஞரும் என்னுடைய பக்கத்தைப் பொருட்படுத்த மறந்து போயினர். எதிரியும் இம்மதியுரைஞர்கள் கூற்றுப்படி நடக்குமென நம்பி, இவர்களைத் தவிர பிறருடனான உறவுகளை முறித்தான். எப்படியோ இவர்களைத் தவிர பிறரில்லாத நான், இவர்களிடம் விழுந்து விடுவாரென நம்பினார். அதனால் தனக்குக் கேடு வருமென நம்மி, தனது கண்காணிப்பில் இவர்களை வைத்திருந்தார். நானும் நெருக்கடி நேரம் இவர்களைத் தேடிய போது இதனை அறிந்தேன்.
எதிரியிடமிருந்து தப்புவதற்காக, மேற்படி உறவுகளை முறித்துக் கொண்டு பிறரின் உதவியைப் பெற்றுத் தப்பித்துவிட்டேன். எதிரியோ, நானும் வலிய, வளத்தில வந்து தன் காலில் விழுவேனென நம்பி ஏமாந்தான். எதிரியைக் கடந்தல்லவா, மேற்படி உறவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. வலிய, வளத்தில வரவைக்கப் போய் எல்லோரும் பிரிய, எனக்கோ புதிய உறவுகள் கிடைத்தது.
இந்தக் கதையில் எதிரியின் தோல்விக்கான சான்றுகள் என்ன? நான் எவரெவர் காலில் விழுவேன் எனத் தெரிந்தும், அவர்களைத் தனது கண்காணிப்பில் வைத்திருந்தமை. மதியுரை கூறியவர்களை நாடக்கூடியதாக எதிரி வஞ்சித்தமையால், பிறர் என்மீது இரங்கினர். பிறரது உதவியால் நான் நன்மையடைய, எதிரி பெற்ற மதியுரையும் பொய்யாயிற்று. வன்முறையால் எவரையும் பணியவைக்க முடியாது. அப்படிப் பணிய வைத்தாலும் கூட, முழுப் பயன்பாட்டையும் பெறமுடியாது.
எனது அன்புக்குரியவர்களே! வலிய, வளத்தில எத்தனை ஆள்களை வரவைக்கப் போறியள்? இதோ சில வழிகள்…
1. சரியாக முடிவு எடுங்கள் : மேலே சுட்டிய எதிரியைப் போன்று ஏமாறவும் கூடாது, எதிரியுடன் கூடிய உறவுகள் பிரிவுற்றது போல பிரியவும் கூடாது. எதிரியும் உறவுகளும் எவ்வாறான பிழையை விட்டிருக்கிறார்கள் என்றறிந்து சரியாக முடிவு எடுங்கள்.
2. விழுத்த வேண்டியவரையும் நினைத்துப் பாருங்கள் : என் மீது இரங்கி சிலர் உதவ, வன்முறையைப் பாவித்தது பிழை. எனது விருப்பைப் பொருட்படுத்தியும் மென்முறையைப் பாவித்தும் இருக்கலாம்.
3. மூன்று பக்கங்களைப் பொருட்படுத்த வேண்டும் : இங்கு முதற் பக்கம் – எதிரியும் உறவுகளும், இரண்டாம் பக்கம் – நான், மூன்றாம் பக்கம் – பார்வையாளர்களாகிய மக்கள். உங்கள் வெற்றியும் இம்மூன்று பக்கங்களிலேயே தங்கியிருக்கிறது. அதாவது மூன்று கோணங்களில் சிந்தியுங்கள்.
4. குறித்த செயலின் பின் நடப்பதென்ன? : குறித்த செயலால் உடனடி நன்மையா அல்லது குறுங்கால நன்மையா அல்லது வாழ்நாள் முழுவதும் நன்மையா? இதே போன்று தீமையும் கிட்டலாம். உறவுகள் வலுக்கலாம் அல்லது முறியலாம். அதே போன்று மக்கள் ஆதரவு பெருகலாம் அல்லது இல்லாமலே போகலாம். எந்தச் செயலையும் செய்ய முன், இது பற்றி அலசவும்.
5. வெற்றி தரும் முடிவு : நமது முடிவுகள் எல்லாம் வெற்றி தருவதில்லை. குறித்த முடிவை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலே தான் முடிவின் வெற்றி அமைகிறது. தமிழில் “ஊரோடு ஒத்துப் போ” என்பார்கள்.
6. ஒருவரின் மதியுரை போதாது : தமிழில் “ஐந்து விரலும் ஒரே அளவு இல்லை” என்பார்கள். அதாவது, ஐந்தாள்களின் படித்தறிவும் பட்டறிவும் வேறுபடலாம். பிறரிடம் மதியுரை கேட்பது நல்லது. ஆகையால், குறைந்தது ஐந்தாட்களின் மதியுரையைப் பெற்று அவற்றில் பொதுவானவற்றைப் பின்பற்றலாம்.
7. தன்னம்பிக்கை வேண்டும் : வெற்றியென்பது எட்டாப்பழம். எட்டாப்பழம் புளிக்குமென்று ஒதுங்கினால் வெற்றி கிட்டுமா? தோல்விகளைச் சந்தித்தாலும் தளராமல் வெற்றிகளை நோக்கி நடைபோடத் தன்னம்பிக்கை வேண்டுமே!
இதுக்கு மேலே அடுக்கினால் நீங்கள் என்னைத் திட்டுவியள். இவற்றை வைத்துக் கொண்டு வலிய, வளத்தில எத்தனை ஆட்களையும் வரவைக்கலாம். எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன்.
அருந்ததி பல சரக்குக் கடைக்கு முன்னே அகலிகையும் பல சரக்குக் கடை ஒன்றைத் திறந்தாள். திறந்த சில ஏழல்களில் (வாரங்களில்) அகலிகையோ வாடிக்கையாளர் யாருமின்றி சோர்வுற்றாள். அருந்ததியை வெல்லவும் அருந்ததியின் வாடிக்கையாளர்களை தன் பக்கம் வலிய, வளத்தில வரவைக்கவும் அகலிகை முயற்சி செய்தாள். ஆயினும், அருந்ததிக்கு உயிராபத்தையோ அருந்ததியின் சொத்துக்களுக்கு அழிவையோ விளைவிக்கவில்லை. அப்படி அகலிகை என்ன தான் செய்திருப்பாள்?
ஒவ்வொரு பொருளுக்கும் அரசு விதித்த விலையில் இரண்டு விளுக்காடு விலைக் கழிவு தரப்படும் என அறிவிப்புச் செய்தாள். (ஒவ்வொரு பொருளிலும் அகலிகைக்குக் கிடைக்கும் பத்து விழுக்காடு தேட்டத்தில் இரண்டு விளுக்காடு விலைக் கழிவு கொடுப்பதால் பெரிதாகச் சோர்வு ஏற்படாது. அதேவேளை அரசு விதித்த விலையை விடக் குறைத்து விற்பதால் சட்டச் சிக்கல் ஏற்படாது.) இப்போது அகலிகை பல சரக்குக் கடைப் பக்கம், அருந்ததி பல சரக்குக் கடை வாடிக்கையாளர்கள் வலிய, வளத்தில வந்து விழுந்திட்டினம்.
குறித்த ஆணையோ, குறித்த பெண்ணையோ உங்கட பக்கம் வலிய, வளத்தில வந்து விழுந்திட இவ்வழிகளைக் கையாளலாம். ஆனால், திரைப் படங்களில் வருவதைப் பின்பற்றக் கூடாது. திரைப் படங்களில் எப்படியோ எதையாவது திணித்துப் போடுவாங்கள். அப்படியாயின், உங்கட ஆளை வலிய, வளத்தில வரவைக்க முடியாமல் போய்விடும். எனவே, மேலே வாடிக்கையாளர் அல்லது பயனாளி விருப்பறிந்து அகலிகை வெற்றி பெற்றது போன்று நீங்களும் உங்கட ஆளின் விருப்பறிந்து செயற்பட்டால் உங்கட ஆளை வலிய, வளத்தில உங்கட பக்கம் வரவைக்கலாமே!

புகழ் யாருக்கு?

மனிதன் ஏதோ ஓர் எதிர்பார்ப்பை முன் வைத்தே எதனையும் செய்ய முயல்கின்றான். சிலர் வருவாயைக் குறித்தும் சிலர் பெயரையும் புகழையும் (இங்கு பெயரும் புகழும் பிரிக்க முடியாத இணைத் தொடராகும். புகழ் யாருக்கு எனில் குறித்த ஆளின் பெயர் சுட்டப்படுகிறது) குறித்தும் சிலர் மகிழ்ச்சியைக் குறித்தும் என எத்தனையோ எதிர்பார்ப்புகளை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்களில் பேணலாம்.

“புகழ் யாருக்கு?” என்ற கேள்விக்குப் பதில் தருபவர், முதலில் எதனைக் கருத்திற் கொள்வார்? எடுத்துக்காட்டாக ஒரு பிள்ளை படிப்பில் முதலிடம் பெறுகிராரெனக் கருதினால், அப்பிள்ளை அடைகின்ற புகழ்; முதலில் அப்பிள்ளையின் பெற்றோருக்கும் இரண்டாவதாக அப்பிள்ளைக்குப் படிப்பித்த ஆசிரியர்களுக்கும் மூன்றாவதாக அப்பிள்ளையின் முயற்ச்சிக்கும் என்றே புகழின் உரிமையைப் பகிர முடிகிறது.

ஏன் இவ்வாறு புகழின் உரிமையைப் பகிர வேண்டும்? பெற்றோரின் வளர்ப்புத் தான் புகழுக்கான பின்னுாட்டி (Feedback), கற்பித்தவரின் அறிவோ வழிகாட்டலோ தான் புகழுக்கான பின்புலம் (Background) இவ்விரண்டும் இல்லாமல் எவரும் முயற்ச்சி செய்து புகழீட்ட முடியாதே…

இன்னொரு எடுத்துக்காட்டாக மக்களுக்குத் தொண்டு செய்பவரைக் கருதினால், ஊரறிய, நாடறிய “மக்கள் தொண்டன்” எனப் புகழ் பெறலாம். இப்புகழில் பெற்றோரின் வழிகாட்டல், இப்பணிக்குத் தோள்கொடுத்து உதவியவரின் செயல், மூன்றாவதாக முயற்சித்தவரும் புகழின் உரிமையைப் பகிர முடிகிறது.

“புகழ் யாருக்கு?” என்ற கேள்வியை நீங்கள் உங்கள் உள்ளத்தினுள்ளே கேட்டுப் பாருங்கள். ஒருவர் பெறுகின்ற கெட்ட புகழோ நல்ல புகழோ, எத்தனை ஆட்களைப் பாதிக்குமோ எத்தனை ஆட்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ என்று நினைத்துப் பாருங்கள். இதனடிப்படையில் கெட்ட புகழால் ஒருவர் மக்களிடமிருந்து தனிமைப்பட வேண்டி வரலாம். அதேவேளை ஒருவர் நல்ல புகழால் மக்கள் விருப்புக்கு உள்ளாகி நாட்டுத் தலைவராகவோ உலகில் புகழ் பூத்த மனிதராக வரலாம்.

கல்வி என்பது
வெறும் தகுதிச் சான்றிதல் அல்ல
பயனாளர் அடைகின்ற பெறுதிகளே!
நீங்கள் படித்தவரா?
உங்கள் பெறுதிகளைப் பெற்ற
மக்கள் சொல்லியே
உலகம் நம்புகின்றது என்பதை
நீங்கள் மறந்துவிடாதீர்கள்!

எனவே, நல்லதையே செய்யுங்கள்… நற்புகழையே பெறுங்கள்… அதனால் மகிழ்வடையும் அத்தனை உள்ளங்களும் உங்களைப் போற்றிப் புகழ்வார்களே! அதேவேளை நீங்களும் மகிழ்வடைவீர்களே!
யாரப்பா உங்களைப் போற்றிப் புகழப் போறாங்கள்?
முதலாவது உங்களைப் பெற்றவங்கள்…
இரண்டாவது உங்களுக்குப் படிப்பித்தவங்க…
மூன்றாவது உங்களிடமிருந்து பயன்பெற்றவர்கள்
நான்காவது உங்கள் நாடு
ஐந்தாவது உலகம் முழுவதும்
உலகம் முழுவதும் வேண்டாமப்பா…
முதலில ஊருக்க நற்பெயரெடுக்க முயற்ச்சி செய்வோம்.
பின்னாளில் உலகம் எங்களைப் புகழட்டும்.