குழந்தை தொடக்கம் கிழம் வரை ‘மக்கள்’ என்ற குழுவின் ஓர் உறுப்பினராகவே வாழ்கின்றோம். இங்குக் கருத்து முரண்பாடு, அடிபிடி கலகம், திட்டித் தீர்த்தல், ஒதுக்கி வைத்தல் எனப் பல நிகழலாம். இதனால் ஒருவரது உள்ளம் பாதிக்கப்படலாம். இதற்கு உங்கள் தெரிவு மருந்தாகட்டும்.
பாதிப்புற்றவரின் விருப்புக்கு அதாவது சூழலால் ஏற்கக்கூடிய ஒன்றுக்கு ஒத்துழைத்து அன்பாக அரவணைத்தல்.
புதிய சூழலுக்குள் புதிய உறவுகளுடன் விரும்பியவாறு வாழ வழிவிடுதல்.
நன்மை தரும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்காமல் ஊக்கமளித்தல். புதிய உறவுகளை மேம்படுத்த இது உதவும்.
வெறுக்கும் உறவுகளைச் சந்திக்க விடாமலும் விருப்பம் இல்லாதவற்றைத் திணிக்காமலும் விரும்பாத நிகழ்வுகளுக்கு அனுப்பாமலும் பேணுதல்.
உளநல மருத்துவரின் மதியுரைப்படி நெருங்கிய உறவுகளில் ஒருவராக அணைத்து நல்லுறவைப் பேணுதல்.
நீங்கள் உங்கள் உளநல மதியுரைகளைப் (ஆலோசனைகளைப்) பின்னாட்டமாக இங்கே இடலாம். தங்கள் உளநல மதியுரைகளை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.