Monthly Archives: ஜனவரி 2015

கடலூர், வடலூரில் உளநல வழிகாட்டலும் மதியுரையும்

மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழக உறவுகளே!
யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html
என்ற எனது பதிவை நீங்கள் படித்திருக்கலாம். அவ்வேளை உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தேவைப்படுவோர் சந்திக்கும் வேளை அதற்கான தீர்வுகளை என்னால் வழங்க முடியும். அதாவது, தங்கள் உளநலம், உடல்நலம், குடும்பநலம் பேணுவதெப்படி என என்னுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 – 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். மேற்படி கருத்தாடலில் பங்குபற்றச் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா – 091 087 54979451

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உண்மையா?

நான் உட்பட உண்மை இல்லை என்று சொல்லப் பலர் இருக்கலாம். ஆமாம்,
தமிழுக்கு முதல் நாள் என்றதும் புத்தாண்டுப் பிறப்பென்றதும் அன்றைய நாள் புதிய பயணத்தின் தொடக்க நாள் என்றதும் நல்லதோர் இலக்குக் குறித்து நன்நெறி வழியே செல்லும் வேளை வெற்றி கிட்டும் என்பது உண்மையே! இவ்வாறு நாம் இப்புனித நாளில் பயணம் செய்வோம்; வெற்றிகள் கிட்ட வழி பிறக்குமே!

புகைவண்டி இயந்திரம் நின்றுவிட்டால், தொடரும் பெட்டிகளும் நின்றுவிடும். அதற்காக முதல் நாள் செயற்திட்டம் நின்றுவிட்டால், தொடரும் செயற்திட்டமும் நின்றுவிடும் என்று பொருள் கொள்ளவேண்டாம். புகைவண்டி இயந்திரம் திருத்தப்பட்டால் பயணம் தொடருவது போல, முதல் நாள் செயற்திட்டம் திறம்பட இடம்பெற்றால் தொடரும் நாள்களிலும் வெற்றி கிட்டுமே!

முடிவாகச் சொல்வதாயின் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது உண்மை தான். நல்லதோர் இலக்குக் குறித்து நன்நெறி வழியே செல்லும் ஒவ்வொருவருக்கும் உண்மை தான். எனவே, 2015 தைப்பொங்கல் நாளில் இருந்து வாழ்வின் வெற்றிக்கான வழிகளில் பயணிக்க வாழ்த்துகிறேன்.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

உடல் நோய்கள் பல, நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் தங்கியிருக்கிறது. அதனை அறிந்துகொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள். via மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்.

2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா?

2015 பிறந்தாச்சு! இனியாவது வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்குமா?

இத்தனை நாளும் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிய “முதற் கோணல் முற்றும் கோணல்” என்று மாற்றார் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்குவது சரியா?

என்னைப் பொறுத்த வரையில் பிழை என்பேன். முதற் கோணல் என்பது முதலாம் செயல் பிழைத்தமை அல்ல, எதனால் பிழை வருமென்பதை அறிந்து செயற்படாது இருந்தமையே! அப்படியாயின் முற்றும் கோணல் என்பது முதற் கோணல் சரி செய்யப்படாது தொடரும் எச்செயலும் வலுவிழந்த ஒன்றே!

2015 இலும் முதற் கோணல் முற்றும் கோணலா? என்றால் இல்லை என்று தொடருங்கள். எப்படித் தொடருவதா? முதற் கோணல் சரி செய்யப்பட்டால்; எதைத் தொடர்ந்தாலும் எதிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிட்டுமே!

பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, தவறுகள் சரி செய்யப்பட்டு, தடைகள் அடையாளம் காணப்பட்டு, இலக்கை அடைவதற்கான ஒழுங்கோடு இறங்கினால் முதற் கோணலும் முற்றும் கோணலும் பொய்யென்று உணர முடியும்.