பெரிய ஆள்: என்னடா சின்னப் பொடியா, புல்லும் காட்டுக் காய்களும் கொண்டு பயணம்?
சின்ன ஆள்: பாவற்காய், புடோலங்காய், தேங்காய்ப்பூக் கீரை, பனங்கீரை எல்லாம் நாளைக்குச் சமையலுக்கண்ணே!
பெரிய ஆள்: உங்கட வீட்டாருக்கு உருளை, மரவள்ளி, பீற்றூட், கரட் போன்ற நாட்டுக் கறிகள் விழுங்க மாட்டினமோ?
சின்ன ஆள்: எங்கட வீட்டாருக்குச் சீனிச் சக்கரை நோய் காணும்! உந்தச் சீனிக் கறிகளை உண்டு சாவதை விட கய்ச்சல், புளிச்சல் உண்டு வாழலாமே!
பெரிய ஆள்: அதுக்காக ஆடு, மாடுகளைப் போல புல், பூண்டுகளையே தின்னுறது…
சின்ன ஆள்: அதண்ணே, உங்களுக்கும் சீனிச் சக்கரை நோய் வந்தால் புரியும் அண்ணோய்!
குறிப்பு:- நீரிழிவு நோயாளிகள் இலைக் கறிகளுடன் தானிய வகைகள், பனம் பண்டங்கள் சாப்பிடலாம். அரிசி, மா, கிழங்கு போன்ற சக்கரைச் சீனிச் சாப்பாட்டை நிறுத்தவேணும் பாருங்கோ!