Monthly Archives: பிப்ரவரி 2015

மணமுறிவு வேண்டாமா? வேண்டுமா?

அன்புள்ளங்களே!

மணமுடித்து வாழுங்கள்! மணமுறிவு ஏற்பட வாழாதீர்கள்!
காதலிக்கலாம்; திருமணம் செய்யலாம்! மணமுறிவு (Divorce) எதற்கு?
அதற்கு முன் காதல் முறிவு (Love Break) ஏன் ஏற்படுகிறது?
காதல் அரும்பிய வேளை காட்டிய உள்ளம் வெளிப்படுத்தியது வேறு…
காதல் முற்றிய வேளை உள்ளம் வெளிப்படுத்திக் காட்டுவது வேறு…
அதனால் தான் காதல் முறிவு (Love Break) என்பேன்!

ஆனால், மணமுறிவு (Divorce) அப்படியல்ல…
மனைவியின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத ஆண்களால்…
கணவனின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யமுடியாத பெண்களால்…
இவற்றை அலசி, ஆய்வு செய்ய நெடுநாள் நீடிக்கும்…
அடிக்கடி நானறிந்த மணமுறிவு (Divorce), பாலியல் (Sex) அடிப்படையிலே தான் அமைந்திருப்பதைக் கண்டேன். அது பற்றிக் கிடைத்த சான்றுகளைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.

தன்மகிழ்வு / சுயஇன்பம் (Masturbation)!
திருமணம் செய்ய முன்னர் இருபாலாரும் தன்மகிழ்வில் ஈடுபட்டிருக்கலாம். திருமணமாகிய பின் இருபாலாரும் தன்மகிழ்வைக் கைவிட முடியாமையால் பாலியல் (Sex) உறவில் நிறைவடைய முடிவதில்லை. இந்நிலை நீடிப்பதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

ஐயம்!
பெண்ணுக்குக் கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…
ஆணுக்கு மனைவி பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பது…
இந்த ஐயம், சில வீடுகளில் உண்மையாவதால் மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

குடி!
சில வீடுகளில் பெண்களும் குடிக்கிறார்கள்…
ஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் குடிக்கிறார்கள்…
குடி, பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

புகைத்தல்!
சில வீடுகளில் பெண்களும் புகைக்கிறார்கள்…
ஆயினும், ஆண்கள் தான் எல்லா வீடுகளிலும் புகைக்கிறார்கள்…
புகைத்தல், பாலியல் (Sex) உணர்வுகளைக் குறைத்துவிட மணமுறிவு (Divorce) ஏற்படுகிறது.

மேற்காணும் நான்கு தலைப்புகளில் மணமுறிவு (Divorce) ஏற்படாதவாறு அவரவர் தம்மைத் தாமே மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். அதேவேளை ஒருவருக்கொருவர் உண்மை நிலையைக் கூறி தமக்குள்ளே தாம் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொருவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்ய முயன்றால் மணமுறிவு (Divorce) ஏற்பட வாய்ப்பிருக்காது என்பேன்! மணமுறிவு வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

அடுத்த பகுதி
தலை போகின்ற முறையற்ற உறவு எதற்கு?

சிக்கலுக்கான எனது தீர்வுகள்

சிக்கல் (பிரச்சனை) என்று வந்துவிட்டால்
சிக்கலை (பிரச்சனையை) உண்டாக்குவோரும்
சிக்கலுக்கு (பிரச்சனைக்கு) உள்ளாகுவோரும்
சந்திப்பதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
ஒரு பகுதி அமைதி பேணினால்
மறுபகுதி நிறுத்துவதைக் கண்டிருப்பியளே!

இவ்விரு பகுதியினரில்
இவ்விரு பகுதியினருமே மோதிக்கொண்டால்
தீர்வின்றித் தொடருவதைக் கண்டிருப்பியளே!

சிக்கலைச் சிக்கலாக எடுத்தால் தானே
சிக்கல் என்பார்கள்
சிக்கலைப் படிப்பாகக் கருதினால் தானே
தீர்வினைக் கற்பார்கள்
சிக்கலுக்குத் தீர்வு தேடும் போதே
இப்படியும் இருக்கென்பதைக் கண்டியளோ!

அமைதி வலுத்தால் தீர்வு கிட்டும்
மோதல் வலுத்தால் தீர்வு கிட்டாதே
இதுவே எனது தீர்வு கண்டியளோ!

இந்த
என் தீர்வுக்குப் பெறுமதியில்லைக் காணும்
அந்த வள்ளுவர்
“எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு. (467)” என்று
சொன்னாரே – அந்தத்
தீர்வே பெறுமதியானது என்பேன்!

குறிப்பு: சிக்கல் (பிரச்சனை) வந்த பின் எண்ணுவதை விட ஒவ்வொரு செயலிலும் இறங்கு முன் சிக்கல் (பிரச்சனை) வந்துவிடாமல் எண்ணிக்கொள்வதே எனது தீர்வாகும். இதற்குச் சரியாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/